பிரார்த்தனை. பகுத்தறிவு கட்டுரை- 1.1.1936

Rate this item
(0 votes)

பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும், அதாவது கடவுளால் மக்கள் நடத்தப்படுகி றார்கள் என்று நம்பும் எல்லோரிடத்திலும் இருந்துவருகிறது. இது எல்லா நாட்டிலும், எல்லா மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது.

பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை முதலிய காரியங்களும், பெயர்களும் சொல்லுவ துண்டு.

இவையெல்லாம், கடவுளை வணங்கி தங்களுக்கு நன்மை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளுவதேயாகும்.

தனக்கு வேண்டியவற்றையெல்லாம், அதாவது இம்மையில் இவ்வுலகில் யுக்தி, செல்வம், சுகம், இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவைகளும், மறுமையில் மேல் லோகத்தில் பாவ மன் னிப்பு, மோட்சம், நல்ல ஜென்மம் முதலியவைகளும் கிடைக்க வேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.

இந்த பிரார்த்தனையின் அஸ்திவாரம், உலகத்தைப் படைத் துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும், அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வமும் அறியும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக்கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியத்திலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள்தான் பிரார்த்தனைக்காரர்க ளின் கருத்தாயிருக்கிறது. இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்க டவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க, பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன் பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த்தனையில் சேர்ந்த தாகும். அதாவது, கடவுளுக்கு இன்ன இன் னது செய்வதாக நேர்ந்து கொள்ளுவது, ஜீவ பலி கொடுப்பது, கோயில் கட்டுவது, உற்ச வம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப் படுவனவாகும்.

ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறுபெயர் சொல்லவேண்டுமானால் பேராசை என்றுதான் சொல்லவேண்டும். பேராசை என்றால், தகுதிக்குமேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறு வது, படித்துப் பாஸ் செய்ய வேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என்றால், பணம் வேண்டியவன் பிரார்த்தனை யில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், "மோட்சத்துக்கு" போகவேண்டும் என்கின்றவன் பிரார்த்தனையில் மோட்சத்துக் குப் போகவேண்டும் என்றால், இவைகளுக்கெல்லாம் பேராசை என்று சொல்லுவதோடு, வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித்தனமும், மோசடியும் என்றும் சொல்லுவது தான் மிகப் பொருத்தமாம். பேராசையும், சோம்பேறித்தனமும், ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமே இல்லை .

மற்றும், முன் குறிப்பிட்ட தேவைகளுக்காக பிரார்த்தனை செய்வதும், பிரார்த்தனையில் அவைகளை அடையப் பார்ப்ப தும், முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள கடவுளை சுத்த முட்டாள் என்று கருதி அதை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சி என்று கூடச் சொல்லி ஆகவேண்டி இருக்கிறது.

எந்த மனிதனும் தகுதியானால் எதையும் அடையலாம். அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து தகுதியாக்கிக் கொண்டு பலனையடைய எதிர்பாராமல், காரியத்தைச் செய்யாது, பிரார்த் தனையில் பலன் அனுபவிக்கவேண்டும் என்று கருதினால், கடவுள், வேலை செய்யாமல் கூலி கொடுக்கும் ஒரு அறிவாளி என்றும், தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக் கும் ஒரு தற்புகழ்ச்சிக்காரனென்றும்தானே சொல்லவேண்டும்.

தவிர, இந்தப் பிரார்த்தனையின் தத்துவமானது மனிதனைச் சோம்பேறியாக்குவதோடு, சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் லைசென்சு - அனுமதிச் சீட்டு கொடுப்பதுபோலாகிறது. விதை நட்டு தண்ணீர் பாய்ச்சாமல் அறுப்பு அறுக்கக் கத்தி எடுத்துக்கொண்டு போகிறவனுக்கும், யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர்பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்க வில்லை. கடவுள் சகலத்தையும் உணர்ந்து அதற்குத் தகுந்தபடி பலன் கொடுக்கக் கூடிய சர்வஞ்த்துவம் உள்ளவர் என்று ஒருவன் கருதி இருப்பா னேயானால், அவன் கடவுளைப் பிரார்த்தனை செய்யும் வேலையில் ஈடுபடவோ, அதற்காக நேரத்தைச் செலவு செய் யவோ ஒருபொழுதும் துணியமாட்டான்.

ஏனென்றால், சகல காரியமும் கடவுளால்தான் ஆகும் என்று நினைத்துக் கொண்டு கடவுள், யாருடைய முயற்சியும் கோரிக் கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும், எண்ணத்துக் கும், தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்துவிட்டார் என்றும் அதாவது விதியின்படிதான் முடியும் என்றும்) தெரிந்திருந்த ஒருவன், அந்த தெளிவில் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை செய்வானா என்று யோசித் துப் பார்க்கவேண்டுகிறோம். 

சாதாரணமாக மக்களில் 100-க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவலமான - அறிவற்ற - வியாபாரத்தனமான முறையில் இருந்து வருகிறது. அதாவது, எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு நான் இன்ன காரியம் செய்கின்றேன்; அல்லது உனக்கு இன்ன காரியம் செய்கிறேன், அதற்குப் பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய் என்கின்ற முறையிலேயே பிரார்த்தனை இருந்து வருகின்றது. இவர்கள் எல்லோரும் அதாவது இந்த பிரார்த்தனைக்காரர்கள் எல்லோரும் கடவுளை புத்திசாலி என்றோ , சர்வசக்தி உள்ளவன் என்றோ , பெரிய மனிதத் தன்மை உடையவன் என்றோ கருதவில்லை என்றுதான் சொல்லி ஆகவேண்டும். சிலர் சொல்லுகிறார்கள், மனிதன் பாபி, அவன் பாப கர்மத்தைச் செய்துதான் தீருவான்; ஆதலால் மன்னிப்பு கேட்டுத்தான் தீரவேண்டும் என்கின்றார்கள். 

நான் பாபம் செய்துதான் தீருவேன்; நீ மன்னித்துத்தான் ஆகவேண்டும் என்று பிரார்த்திப்பதை கடவுள் ஏற்றுக்கொள்வ தானால், மனிதன் எந்தப் பாபத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்படவேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாபத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால், புண்ணியம் என்பதற்கு அர்த்தம் என்ன? ஆகவே, கடவுள் கற்பனையைவிட இந்த பிரார்த்தனைக் கற்பனையானது, மிகமிக மோசமானது என்றுதான் சொல்லவேண் ஒம். பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட் பால் கடவுள் கற்பனை ஒரு பிரயோஜனத் தெயும் கொடுக்காமல் போய்விடும்.

மனிதன் பூஜையும், பிரார்த்தனையும் செய்வதற்குத்தான் கடவுள் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய, கடவுளுக்காக பூசையும், பிரார்த்தனையும் ஏற்படுத்தப்படவில்லை . குரு (பாதிரி), புரோகி தன் (பார்ப்பனர்) ஆகியவர்கள் பிழைப்புக்காகவே பிரார்த்தனை யும், கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்படவேண்டியதாய் விட் டது. இந்த இரண்டு காரியமும் இல்லாவிட்டால் பாதிரிக்கோ, முல்லாவுக்கோ, புரோகிதனுக்கோ ஏதாவது வேலை உண்டா என்பதை யோசித்துப் பாருங்கள். ஆஸ்திகர்கள் கொள்கைப் படி, மனிதனுடைய செய்கையும், எண்ணமும் “சித்திர புத்திர னுக்கோ, கடவுளுக்கோ தெரியாமல் இருக்கவே முடியாது." இதற்காக பலன் கொடுக்க தீர்ப்பு நாளும் எமதர்ம ராஜாவும் இருந்தே இருக்கிறான். மத்தியில் பிரார்த்தனை, பூசனை என்பது மேல்கண்ட இரண்டையும் ஏமாற்றவா அல்லது குருவும் புரோகி தனும் பிழைக்கவா என்பது யோசித்தால் விளங்காமல் போகாது.

பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப்போல் மனிதன் வீணாய்க் கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லு வோம். சில சோம்பேறிகள் பிழைப்பதற்காக மக்கள் புத்தி எவ்வளவு கெடுகிறது? மக்களுக்கு அயோக்கியத்தனம் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டு விடுகிறது? பொருள்கள் எவ்வ ளவு நாசமாகிறது? என்பவைகளையெல்லாம் யோசித்துப் பார்த் தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ , பயனற்ற காரியம் என்றோ , அறிவீனமான காரியம் என்றோ விளங்காமல் போகாது.


பகுத்தறிவு கட்டுரை- 1.1.1936 

 

 
Read 31 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.