ஆரியர் கடவுள்கள் மாரியின் தன்மை. குடி அரசு -18.3.1944

Rate this item
(0 votes)

ஆரியர் கடவுள்களுக்கு விபசாரித்தனத் தைக் கற்பிக்காவிட்டால் அவைகளுக்குப் பெருமை இல்லை என்று ஆரியர்கள் கருதி வந்திருக்கிறார்கள் போலும். ஆண் கடவுள்க ளுக்கு விபச்சாரித்தனம் கற்பித்துக் கொண்டி ருப்பதில் நாம் ஆச்சரியப்படவில்லை. ஏனெ னில், தேவ தாசிகளுக்கு விபச்சாரித்தனம் எப்படி குற்றமற்றதும் குறை கூறப்படாததுமாய் இருக்கிறதோ, அதுபோல் ஆண்களுக்கும் விபச்சாரித்தனம் குற்றமற்றதும் குறைகூறக் கூடாததுமாய் இருக்கின்றது. அது போலவே, ஆண் கடவுள்களின் விபச்சாரித்தனம் எப்படி போற்றி மகிழக் கூடியதாகவும், அதன் பேரால் உற்சவம், திருநாள் கொண்டாடும்படியான பெருமை அளிக்கத்தக்கதாக வும் இருக்கிறதோ, அதுபோல் ஆண்களின் விபச்சாரித்தனமும் ஆண்களுக்கு ஒரு பெருமையாகவே இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால், பல ஆண்கள் தங்கள் நடத்தையால் தங்களது மனைவிமார் தப்பாக நடக்க நேருமே, சில இடங்களில் தப்பாக நடந்து அடையாளங்கள் கூடத் தெரிந்து உலகம் இகழுகின்றதே என்று தெரிந்தும் அதைப்பற்றிக் கவலை இல்லாமல், பெயர் பெற்ற சில விபச்சாரிகளை தாங்கள் வைத்துக் கொண்டிருப்பதா கப் பிறர் கருதும்படி நடந்து கொள்ளுவார்களா?

சில கிராமாந்தரங்களிலே “பண்ணையாருக்கு பிறந்தது பள் ளுப்பாடிப் பிழைக்குது; பண்டாரத்துக்குப் பிறந்தது (அதாவது தவசிப்பிள்ளை அல்லது சமையல்காரருக்குப் பிறந்தது) பட்டா மணியம் செய்யிது" என்று ஒரு பழமொழி உண்டு.

அதாவது, எஜமானனின் சொந்த மனைவி, சமையல்காரன் சம்மந்தத்தால் பெற்ற பிள்ளை எஜமானனது சொத்துக்கு உரிமையாகிவிட்டது என்றும், எஜமானனின் தாசியினிடம் எஜமானனுக்கே பிறந்த பிள்ளை கீழான தொழில் செய்து இழிவான நிலையில் இருக்கிறது என்றும் அருத்தமாகும். இதிலி ருந்து, ஆண்கள் விபச்சாரித்தனத்தால் இழிவடைவதில்லை என்பது தெரிகிறது. இது எப்படியோ போகட்டும். எடுத்துக் கொண்ட விஷயத்திற்குப் போவோம். ஆனால், ஆரியர்கள், பெண் தெய்வங்களுக்கும் விபச்சாரித்தனக் குற்றத்தைச் சுமத்து வதற்குப் பின்வாங்குவதில்லை. இது மிகவும் இழித்துக் கூறத் தக்கதாகும்.

துரவுபதை, சீதை, அகலிகை, தாரை முதலி யவர்கள் மீது சுமத்தப்பட்ட விபச்சாரக் குற் றங்களை ஆரியர்கள் குற்றமாகப் பாவிக்க வில்லை என்பதோடு, இப்பெண்களைப் பதிவிரதைகளுடனும் சேர்த்துவிட்டார்கள் என்றாலும், பாமர மக்கள் கடவுள்களான மாரியம்மன் முதலிய கடவுள்களுக்கும், விபச்சாரித்தனத்தைப் புகுத்தியது மிகவும் வெறுக்கத்தக்கதாகும்.

நம் கிராம தேவதையான மாரியம்மன், ஜமதக்கினி என்னும் ஒரு முனிவனுடைய மனைவியாய் ரேணுகை என்னும் பெயரு டன் இருந்தவள். இவள், சித்திரசேனன் என்பவரின் நிழலைக் கண்டு மோகித்து மனம் கெட்டு கற்புக்குலைந்தாள். இது தெரிந்த கணவன் தன் மகனை அழைத்து இவளைக் கொலை புரியும்படி செய்தான். பிறகு, மகன் துக்கப்பட்டதின் பேரில் அவளை எழுப்ப மந்திர நீர் தெளித்தான். மகன், தலையை அடையாளம் கண்டுபிடித்தானே ஒழிய, உடலை அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. ஆதலால் அவள் தலையை வேறு ஏதோ ஒரு உடலில் ஒட்டவைத்து அவளை உயிர்ப்பித்தான். அவள் எழுந்து கணவனை மன்னிக்கும்படி வேண்டினாள். 

கணவன் மன்னித்து, நீ ஊருக்கு வெளியே கிராமங்களுக்குப் போய் வாழ்ந்து கொண்டு இரு என்று சொன்னான். அந்தப்ப டியே மாரி கிராமங்களுக்குப் போய் கிராம தேவதையாக ஆகிவிட்டாள். ஆனால், கிராமத்திலுள்ளவர்கள், இவளுடைய தலை மாத்திரம் இவளுக்குச் சொந்தமாகவும், உடல் வேறு ஒருவருடையதாகவும் இருந்ததால், இவளுடைய உடலை தள்ளிவிட்டு தலையை மாத்திரம் வைத்து வணங்குகிறார்கள். (அதனாலதான் சென்னை முதலிய இடங்களிலும் மாரி கோயில் களில் இன்றும் தலை உருவம் மாத்திரமே வைத்து வணங்கப்ப டுகிறது. கிராம மக்களும் பலர் தலை உருவம் மாத்திரம் வாங்கி வைக்கிறார்கள்.) பேன்

இந்த அம்மையை வணங்குவோர் வேப்பிலையும், மாவும், இளநீரும் பயன்படுத்துவதின் காரணம் என்னவென்றால், இந்த அம்மை கொல்லப்பட்டபின் சுடுகாட்டில் வேகும் போது உயிர் பெற்று எழுந்ததும், நேராக வீட்டுக்கு வர முடியாமல் நிர்வாணத் துடன் வேப்பிலைகளால் தன் மானத்தை மறைத்து கொண்டு பக்கத்தில் இருந்த பறச்சேரிக்குள் போய்ப் புகுந்தாள். குள்ள பற ஜனங்கள், இந்த அம்மை பார்ப்ப னப் பெண் ஆதலால் சாப்பாடு போட்டால், தங்களுக்குப் பாபம் வரும் என்று அஞ்சி, அரிசி மாவையும், பழத்தையும், இளநீரை யும் தந்து உதவினார்கள். அதனால், அவை களே அந்த அம்மைக்கு அதாவது வேப்பந்த ழையும், மாவும், உடையும் ஆகாரமுமாக ஆகிவிட்டன.

அந்த அம்மைக்கு தண்ணீர் ஏன் குடம் குடமாய் ஊற்றுகிறார் கள் என்றால், அந்தம்மையை சுடுகாட்டில் வைத்துக் கொளுத் தும்போது தண்ணீர் தெளித்து எழுப்பியதால் உடலில் கொப்பு ளங்களோடு போய் சேரியில் புகுந்ததால், உடல் குளிருவதற்கு ஆக தண்ணீர் ஊற்றப்பட்டதாம். இந்தப்படியாக மாரியம்மன் கதை இருந்துவருகிறது. ப

மற்ற விஷயம் எப்படியோ போனாலும், இந்தம்மை கற்பழிந் தாள்; அதனால் சாபம் பெற்று மாரியம்மை ஆனாள் என்றால், கற்பு கெடாத பெண் தெய்வமே நமக்கு இல்லை என்றல்லவா ஆகிறது. இதிலிருந்து, ஆரியர்களுடைய கற்புக்கு அர்த்தம் என்ன என்பது விளங்குகிறது. ப

பிசாசைப்பற்றி ஆரியர்களும், இஸ்லாமியர்களில் பலரும் நம்புகிறார்கள். இது மிகவும் மதிஈனமான காரியம். கடவுளை எந்த ரூபத்தில் எந்தக் குணத்தில் மனிதன் நம்பினாலும், அது எவ்வளவு முட்டாள்தனமானாலும், "மனிதன் ஒழுக்கமாக நடப்பதற்கு அந்த நம்பிக்கை ஒரு சாதனம்" என்றாவது சொல்லுகிறார்கள். ஆனால், பிசாசை நம்புவது எதற்கு அனுகூ லம் என்று கேட்கிறேன்.

பிசாசை நம்புவதிலும், அதிலுள்ள ஆபசம் என்னவென்றால், ஒருவன் தன் பெண்ஜாதிக்குப் பிசாசு பிடித்து இருக்கிறது என்று நம்புகிறான் என்றால், அதன் அர்த்தமென்ன? ஒரு பிசாசு தன் மனைவியை கலவி செய்து கொண்டு வருகிறது என்றுதானே கருதி அப்படிச் சொல்கிறான். ஒரு பெண்ணை “1 பிசாசு முதல் 15, 20 பிசாசுகள்'' பிடித்து இருக்கின்றன என்றுகூட புருஷன் மார்கள் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அதுவும் பல ஜாதிப் பிசாசுகள்; அதிலும், "கீழ்சாதி"ப் பிசாசுகள் என்றுகூட சொல்லு கிறார்கள்.

இது மானமுள்ள பேச்சாகுமா? ஒருவன் மனைவியை 10 பிசாசுகள், 20 பிசாசுகள் கலவி செய்வதும், பிறகு இன்னும் கணவன் அவளை மனைவி யாகக் கொள்ளுவதும் பார்த்தால் இந்தக் கணவனுக்கு சுயமரியாதை இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா? இது என்ன மடத்தனம் என்பது எனக்கு விளங்க வில்லை. தன் மனைவியை வேறு மனிதன் எவனவது திரும்பிப் பார்த்துவிட்டால் 

ஆகாயத்திற்கும், பூமிக்கும் குதிக்கும் சிப்பாய், 10, 20 பேய்கள் சேர்ந்து கலவி செய்த பெண்ணை சேர்த்துக்கொண்டு தன்னை எப்படி “ஆண் பிள்ளை சிங்கம்” என்று சொல்லிக் கொள்ளமுடி

மனிதனைவிட பேய் பிசாசு உயர்வு என்று அர்த்தமா? அல்லது கையாலாகவில்லை; ஆனதால் எப்படியோ போய்த் தொலையட்டும் என்கிற வீரப்பிரதாபமா? என்று கேட்கிறேன்.

முஸ்லிம்களுக்கும்கூட சிலருக்கு இந்தப் பேய் உணர்ச்சி பிடித்திருப்பது பார்த்தால் அவர்கள் வேஷத்தில் முஸ்லிம்களே தவிர, உள்ளத்தில் இந்துக்களை (ஆரியர்களை)விட மோசமான வர்கள் என்றுதான் கருதவேண்டி இருக்கிறது. பாகப்

"கடவுள் நினைப்புக்கும், பேய் நினைப்புக்கும் ஒரு மயிர் இழை அளவுதான் வித்தியாசம்" என்று ஒரு பகுத்தறிவுவாதி சொல்லி இருக்கிறார். ஆனால், தங்கள் மனைவிமார்களிடம் பேய் கலவி செய்கிறது என்று கருதுகிற முஸ்லிம்கள், தங்கள் கடவுளைவிட பேய் எத்தனையோ கோடி மயிர் இழை அளவு பெரியது என்று கருதுகிறவர்களாவார்கள் என்று சொல்லு வேன். கடவுள் ஒருவன் மனைவியை இப்படிச் செய்வதில்லை. இந்துக்கள் கடவுள்களும் பேயைப்போல் 10, 15 கடவுள்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு மற்றவன் மனைவியை கலவி செய்வதில்லை. ஆகையால், இரண்டு கூட்டத்தாருக்கும் இப்ப டிப்பட்ட புத்தி இருப்பது மிகவும் வேகலமானதேயாகும்.

நபி அவர்கள் குர்ஆனில் எங்காவது பேய் இருப்பதாகச் சொல்லி இருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. இப்படிச் சொல்லியிருந்தால், அவர் பகுத்தறிவுவாதிகளின் கூட்டத்தில் சேர்க்கப்பட முடியாதவர் என்று ஆகிவிடாதா?

(சித்திரபுத்திரன் எனும் புனை பெயரில் 

தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை.  குடி அரசு -18.3.1944 )

Read 43 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.