உண்மையான தீபாவளி. குடி அரசு - கட்டுரை - 10.10.1926

Rate this item
(0 votes)

உண்மையான தீபாவளி

தீபாவளி என்பது வருஷத்திற்கொருமுறை வந்து, பெருவாரியான இந்து குடும்பங்களுக்கு சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் கொடுத்து தங்கள் குழந்தை குட்டிகள், மக்கள், மருமக்கள் முதலானவர்களோடு களிக் கும் ஒரு பெரிய பண்டிகையாகும். அப்பண்டிகையன்று ஏழையானாலும் பணக்காரனானாலும் கூலிக்காரனானாலும் முதலாளியானாலும் பண்டிகை யை அனுபவிப்பதில் வித்தியாசமில்லாமல் தங்கள் தங்கள் சக்திக்குத் தகுந்தபடி ஸ்நானம் செய்வதும், புது வஸ்திரங்களை அணிவதும், பலகாரங் களை உண்பதும் முக்கிய கொள்கையாகும். இக்கொள்கைகள் எந்த தத்துவங்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது என்பதில் எவ்வளவு அபிப்பி ராய பேதங்கள் இருந்த போதிலும், பொதுவாய் மக்கள் சந்தோஷத்திற்கு புதிய வஸ்திரங்களையே அணிய வேண்டுமென்றிருப்பதானால் ஏழைத் தொழிலா எருக்கு ஒரு விடுதலையும் ஏற்பட்டு வந்ததென்பது அபிப்பிராய பேதமில்லா மல் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். தற்கால அனுபவத்திலோ சந்தோஷமும் களிப்பும் பலவிதமாயிருந்தாலும், பெரும்பாலும் மேற்படி தீபாவளியானது ஏழைத் தொழிலாளர்களுக்கு பெருந் துரோகத்தை செய்வதற்கே வருவதாகவும் போவதாகவும் ஏற்பட்டு விட்டது. இவ்வித துரோகத் திற்கு பணக்காரர்களும் உத்தியோகஸ்தர்களுமேதான் பெரும்பாலும் ஆதரவளிப் பவர்களாயிருக்கிறார்கள். காரணமென்னவென்றால் பட்டு சேலைகளும், பட்டு துப்பட்டாக்களும், சரிகை சேலைகளும், சரிகை துப்பட் டாக்களும், மல்லுகளும், சல்லாக்களும் இவர்கள்தான் வாங்குகிறார்கள். அதோடு இவர்களைப் பார்த்து இவர்களைப் போல் நடிக்க வேண்டுமென் கிற சிலர் தங்களுக்குத் தகுதியில்லாதிருந்தாலும், கஷ்டப்பட்டு இவற்றையே வாங்க ஆசைப்படுகிறார்கள். கூலிக்காரர்களாகவும் ஏழைகளாகவும் உள்ளவர் களுக்கு இந்த முதலாளிகளும் பணக்காரர்களுமாயிருப்பவர்கள் துணி வாங்கிக் கொடுக்கும் முறையிலும் வெளிநாடுகளிலிருந்து வந்த துணிக ளையே வாங்கிக் கொடுக்கவும் செய்கிறார்கள். இத்தியாதி காரணங்களால் தீபாவளி வருகிறது என்றால் பெரும்பாலும் ஏழை நூற்புக்காரர்களுக்கும், கை நெசவுக்காரர்களுக்கும் பெரியதுரோகமும் கொடுமையும் வரப்போகிறது என்றுதான் அஞ்ச வேண்டியதாக இருந்து வருகிறது. மகாத்மா காந்தியின் சகாப்தமானது இத்தீபாவளிப் பண்டிகையை தேசத்திற்கும் ஏழை மக்க ளுக்கும் உண்மையான சந்தோஷத்தையும் நன்மையையும் கொடுக்கத்

தக்கதான பரிசுத்த பண்டிகையாக்க வேண்டுமென்று மூன்று நான்கு வருஷங்களாக எவ்வளவோ பிரயத்தனங்கள் பட்டும் இன்னும் அது சரியான பலனை கொடுக்குமென்று நம்புவதற்கு இடமில்லாமலிருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு தீபாவளி வருவதாயிருந்தால் தங்கள் மக்களையும் , மரு மக்களையும் சேர்த்து வைத்துக்கொண்டு ஒவ்வொருவரையும் பார்த்து உனக்கு எந்த மாதிரி பட்டு வேண்டும்? உனக்கு என்ன மாதிரி துப்பட்டா வேண்டும்? என்று கேட்பதும், என்ன மாதிரியான பட்டோ, துப்பட்டாவோ, சேலையோ வாங்கினால் அவர்கள் திருப்தி அடைவார்கள் என்பதையும் மாத்திரம் யோசிக்கிறார்களே ஒழிய, என்ன மாதிரி துணி வாங்கினால் நம் நாட்டில் தினம் ஒரு வேளை வயிறார கஞ்சி குடிப்பதற்கு கூட மார்க்கமில் லாமல் தங்கள் மானத்தையும் கற்பையும் விற்று ஜீவிக்க வேண்டி கட்டாயப் படுத்தப்படுகிற ஏழை நூல் நூற்பவர்களையும் கை நெசவுக்காரர் களையும் திருப்தி செய்வதற்கு உதவும் என்று இவர்கள் கொஞ்சம்கூட எண்ணுவதே யில்லை. கிராமங்களில் கஞ்சிக்குக் கஷ்டப்பட்டு பட்டணங்களுக்கு வந்து தெருத் தெருவாய் அலையும் ஸ்திரீகள் நம் சகோதரிகள் என்பதை கொஞ்ச மும் கவனிப்பதில்லை. இந்த ஸ்திரீகளின் வாழ்வும், தாழ்வும் நமக்கும் சம்பந்தப்பட்டதென்பதை கொஞ்சமும் உணர்வதில்லை. நெசவுத் தொழிற் காரர்கள் தங்களுக்குச் சரியான தொழிலில்லாமல் வெளி நாடுகளுக்குக் கூலி களாகச் சென்று வெள்ளைக்காரத் தோட்டக்காரர்களிடமும் கங்காணிகளிட மும் தங்கள் பெண்டு பிள்ளைகளையும் பறிகொடுத்து, மானங்கெட்டு, கற்பிழந்து கஷ்டப்படுகிறார்களேயென்று கொஞ்சமும் கவலைப்படுவதே யில்லை. அவர்களும் நம்முடைய சகோதரிகள்தானே. அவர்கள் கற்பும் மானமும் கெட்டு கஞ்சிக்கு அலைய நாம் தானே காரணமாயிருந்து வருகிறோம் என்று கொஞ்சமும் சிந்திப்பதேயில்லை.

உத்தியோகமும், பணமும், அந்தஸ்தும் வந்தால் முதலாவது தேசாபிமானம் ஓடிப்போய் விடுகிறது. ஏழைகளிடத்தில் அன்பும், தயாளமும் ஏற்படும் வழி அடைபட்டுப் போய்விடுகிறது. இவைகளை யெல்லாம் பார்க்கும் பொழுது ஒரு தூக்குத் தண்டனை உள்ளவருக்கு தூக்கிலிடும் தேதி கிட்ட வரவர எவ்வளவு பயமும் கஷ்டமும் ஏற்படுமோ, அதுபோல் தீபாவளி வருகிற தென்றால் தீபாவளி நாள் கிட்ட நெருங்க நெருங்க ஐயோ! நம் ஏழைக் கூலிக்கார ஸ்திரீகள் வயிற்றிலும் வாயிலும் மண்ணைப் போடுவதான காரியங்கள் நடைபெறப் போகிற நாள் வரப் போகிறதே! வரப் போகிறதே! என்ற பயமும் கஷ்டமும் மனவேதனையும் ஏற்படச் செய்கிறது. எவ்வளவோ நன்மைக்காக ஏற்பட்ட பண்டிகை இக் கொடுமைக்கு உதவவாவரவேண்டும்? என்று மனம் பதறுகிறது. நமது நாட்டில் நன்மைக்காக ஏற்பட்ட காரியங் களெல்லாம் எப்படி தீமைக்கு உதவப்பட்டு வருகிறதோ அதுபோல நமது தீபாவளியும் இவ்வளவு பெரிய தீமைக்கு ஆளாகிறதே என்று தேச க்ஷேமத் தில் கவலையுள்ளவர்களும் ஏழைகளிடத்தில் அன்புள்ளவர்களும் கவலைப் படாமலிருக்கமுடியா தென்றே நம்புகிறோம். தீபாவளியின் போது 

அர்த்தமில்லாமல் சுடும் வெடி மருந்து, பட்டாசுக்காக நம் நாட்டிலிருந்து எவ்வளவு பணம் வெளி நாட்டிற் குப் போகிறதென்பதை நமது நாட்டு ஜனங்கள் அறிவதேயில்லை. ஏதோ சிலர் அறிந்தாலும் அதைப்பற்றி கவலைப்படுவதேயில்லை. ஒரு தேசம் முன்னுக்கு வரவேண்டுமானால் அத்தேச மக்களுக்கு கடுகளவாவது தேசாபி மானமும், பரோபகார எண்ண மும் ஏற்பட்டால்தான் முன்னுக்கு வரமுடியும். அது இல்லாத நாடு எவ்விதத்தி லும் முன்னுக்கு வராது. ஆதலால், இவ்வருஷதீபாவளியை தேச விடுதலைக் கும் ஏழைகளின் கஷ்டம் நீங்குவதற்கும் ஏழைத் தொழிலாள சகோதர சகோதரிகள் நன்மைக்கும் உப யோகப் படும்படி கொண்டாட வேண்டுமா னால் பணக்காரர்கள், உத்தி யோகஸ்தர்கள், வக்கீல்கள், முதலாளிகள் முதல் ஏழைகள், கூலிக்காரர்கள், நடுத்தர வகுப்பினர் முதலிய எல்லோரும் தீபாவளி யின் பொருட்டு தங்களுக்காகவும் தங்கள் பெண்டு பிள்ளைகள், மக்கள், மருமக்கள், வேலைக்காரர்கள், ஏழைகள் முதலியவர்களுடைய ஒவ்வொரு வருடைய திருப்திக்காகவும் செலவு செய்ய நினைக்கும் ஒவ்வொரு பைசாவும் நம் நாட்டிலேயே இருக்குமா? நம்நாட்டில் கஞ்சிக்கில்லாமல் திண்டாடும் ஏழைகளுக்கும், கூலிக்கார சகோதர சகோதரிகளுக்கும் போய்ச் சேருமா? அவர் கள் திருப்தி அடைவார்களா? என்று யோசித்துப் பார்த்தே செய்ய வேண்டியது முக்கியமான கடமையாகும்.

அப்படிச் செய்வது வாஸ்தவமானால் துணி வாங்குவதில் வெளி நாட்டுக்குப் பணம் போகும்படியான பட்டோ, சரிகையோ, வெளிநாட்டு மல்லோ, சல்லாவோ, இன்னும் பலமாதிரியான வெளிநாட்டு சாமான்க ளையோ வாங்காமல் நம் நாட்டில் நம் ஏழைச் சகோதரிகளால் கைராட்டினத் தில் - நூற்கப்பட்டு ஏழைச் சகோதரர்களால் கைத்தறியில் நெய்யப்பட்டது மான கதர் துணியையே வாங்க வேண்டும்; அதையே உடுத்தவேண்டும்; அதன் தத்துவத்தை நமது மக்கள், மருமக்கள், பெண்டு பிள்ளைகளுக்குச் சொல்லி அதையே அவர்களையும் உடுத்தச் செய்ய வேண்டும். இதனால் எத்தனை ஏழைக் குடும்பங்களில் தீபாவளி எவ்வளவு சந்தோஷமாய் நடைபெறும். இப்படிச் செய்யாவிட்டால் எத்தனைக் குடும்பங்களுக்கு தீபாவளி இல்லாமல் போய்விடும் என்பதையும் அறியாதவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். இப்படியே ஒவ்வொருவரும் நினைத்து எல்லோரும் கதர் வாங்க ஆரம்பித்தால் ஒரு சமயம் எல்லோருக்கும் கதர் கிடைப்பது கஷ்டமாய்ப் போனாலும் போகலாம். ஆதலால் இந்த எண்ணம் உள்ள தேசாபிமானிகளும் ஏழைக்கிரங்கு பவர்களும் இப்பொழுதே கதர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். புதுப் பாளையத்திலும் திருப்பூரிலும் இன்னும் சில இடங்களிலும் மொத்தமாய் கதர் கிடைக்கும். ஈரோடு, சேலம், மதுரை, திருநெல்வேலி, காரைக்குடி, விருதுநகர், திருச்சி, தஞ்சாவூர், மன்னார் குடி, கோயமுத்தூர், கடலூர், மதராஸ், மாயவரம், வேலூர், ராஜபாளையம் முதலிய இடங்களில் காங்கிரஸ் டெப்போவும் காங்கிரஸ் நற்சாக்ஷிப் பத்திரம் பெற்ற கதர்க் கடைகளும் இருக்கின்றன.

சர்க்கா சங்கத்தார் கூடுமானவரை விசாரித்து சுத்தமாய் கதர் உற்பத்தி செய்பவர்களுக்கும் விற்பவர்களுக்கும் காங்கிரஸ் நற்சாக்ஷிப் பத்திரங்களும் கொடுத்திருக்கிறார்கள். வாங்குகிறவர்கள் தயவு செய்து கவனித்து சுத்த கதராய்ப் பார்த்து வாங்க வேண்டும். போலி கதர், மில் நூல் கதர், வெளிநாட்டு நூல் கதர் இவைகள் வாங்குவதால் தேசத்திற்கோ ஏழைச் சகோதர சகோதரிகளுக்கோ ஒருவித நன்மையும் உண்டாகப் போவதில்லை. (குடி நூல்)

ஈ.வெ.ரா

குடி அரசு - கட்டுரை - 10.10.1926

 
Read 50 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.