வடஆற்காடு ஜில்லாபோர்டு பிரசிடெண்டவர்கள் பார்ப்பனர்களுக்கு வேண்டியவர் என்று சிலர் சொல்லுவதுண்டு. இந்தத் தீர்மானத்தில் நாலு பார்ப்பன மெம்பர்களும் தீர்மானத்திற்கு அனுகூலமாய் ஓட்டு செய்திருப்பதாகத் தெரிவதிலிருந்து பிரசிடெண்டு திரு.நாயுடுகாரு அவர்கள் பார்ப்பனர்களுக்கு வேண்டியவராய் இருந்ததின் உண்மையை வெளிப்படுத்தி விட்டார் போலும், இதிலிருந்து திரு. நாயுடுகாரு பார்ப்பனர்களுக்கு வேண்டியவரா? பார்ப்பனர்கள் திரு. நாயுடுகாருக்கு வேண்டியவர்களா? என்பதையும் பொது ஜனங்கள் ஒருவாறு தெரிந்து கொள்ளலாம்.

 

நிற்க, வட ஆற்காடு ஜில்லா போர்டை மற்ற ஜில்லா போர்டு பின்பற்றுமா என்று அறிய ஆசையுடையவர்களாய் இருக்கின்றோம்.

(குடி அரசு - வேண்டுகோள் - 31.03.1929)