கிருஷ்ணசாமி பிள்ளை மறைந்தார்! (குடி அரசு - இரங்கல் செய்தி - 16.12.1928)

Rate this item
(0 votes)

நமது இயக்கத்திற்கு ஆரம்ப முதல் ஆதரவளித்து வந்தவரும், இயக்கத்திற்கு பணம் காசு தாராளமாய் செலவு செய்து வந்தவரும், கோயமுத்தூர் மகாநாட்டுக்கு காரியதரிசியாய் இருந்தவரும், தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்திற்கு காரியதரிசியும், பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கும் இயக்கத்திற்கும் உண்மையான உள்ளன்போடு கூடிய உதவியாளருமான நமது உண்மை நண்பர் திரு. கோவை, நெய் மண்டி கிருஷ்ணசாமி பிள்ளை அவர்கள் காலம் சென்றது மிகவும் துக்கப்படத்தக்க சம்பவமாகும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் அம்மாதிரியான உள்ளன்போடு உழைக்கும் மற்றொரு நண்பரை கோவையில் காணுவது மிகக் கடுமையென்றே சொல்ல வேண்டும். அவர்களின் அருமை மனைவியாருக்கும் தாயாருக்கும் தம்பிமார்களான நமது நண்பர்கள் திருவாளர்கள் சுப்பு, பஞ்சலிங்கம் ஆகியவர்களுக்கும் நமது மனமார்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - இரங்கல் செய்தி - 16.12.1928)

 
Read 35 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.