இந்து மதத்தை காப்பாற்றத் தோன்றியிருப்பதாய் நடிக்கும் நமது “தமிழ்நாடு” பத்திரிகையோ அல்லது ஸ்ரீ வரதராஜுலுவோ இந்திய சட்டசபையிலும் இருந்திருந்தால் “முன்ஷி” ஈஸ்வர சரணரின் நயவஞ்சகம் என்றோ அல்லது “ஈஸ்வர சரணர் பிரசாரம்” என்றோ தலையங்கம் கிளம்பியிருக்கும். அவைகள் அருகிலில்லாதது ஸ்ரீஈஸ்வர சரணர் நல்ல காலமே ஆகும். தவிர பொது ஜனங்களின் பிரதிநிதி என்று சொல்லி சட்ட சபைக்குப் போய் அதனால் வயிறு வளர்க்கும் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் இப்போது தாம் சனாதன வைதீகர்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் அயோக்கியத்தனத்தை அறிந்து அவருக்குப் பொது ஜனங்கள் தக்க புத்தி கற்பிப்பார்களா என்றும் கேட்கின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.04.1928)